இலண்டன் ஒரு எளிய இரத்த பரிசோதனையை வைத்து கடுமையான கொரோனா ( கோவிட் -19 ) நோய்த்தொற்றின் அபாயத்தை கணிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இரத்தத்தில் ஒரு குறிப்பிட்ட மூலக்கூறுவின் சிக்னேச்சரை அடையாளம் கண்டுள்ள விஞ்ஞானிகள், இதுதான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மருத்துவமனையில் அனுமதிக்கும் வாய்ப்புகளை 5 முதல் 10 மடங்கு அதிகரிக்கிறது என்கிறார்கள்.
பின்லாந்தின் ஹெல்சின்கியில் உள்ள ஒரு உயிரி தொழில்நுட்ப நிறுவனமான நைட்டிங்கேல் ஹெல்த் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, தொற்றுநோயைத் தவிர்ப்பதற்கு சிறப்பு முன்னெச்சரிக்கைகள் தேவைப்படும் நபர்களை அடையாளம் காண இந்த சோதனை மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம்.