விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை) வெளியாகியுள்ளது.
அதனடிப்படையில், நாடு கடந்த தமிழீழ அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த கோரிக்கையினை தடைசெய்யப்பட்ட
அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்குழு (Proscribed Organisations Appeal Commission) பரிசீலித்ததன் அடிப்படையில் குறித்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த தீர்ப்பானது பிரித்தானிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டால் மாத்திரமே குறித்த தடை நீக்கம் செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், குறித்த தீர்ப்பினை அடுத்து பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவு அடுத்த சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது