Monday, May 13, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை குவைத் நாட்டு செல்லப் பிராணி இலங்கைக்கு வந்ததால் பலத்த பாதுகாப்பு!

குவைத் நாட்டு செல்லப் பிராணி இலங்கைக்கு வந்ததால் பலத்த பாதுகாப்பு!

1 minutes read

 

குவைத் நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் சுங்க அதிகாரிகளை தாக்கிய சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக
பிரதி சுங்க பணிப்பாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணகளுக்கான நுழைவாயில் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமது செல்லப் பிராணியான நாய் குட்டி ஒன்றை நாட்டிற்குள் கொண்டு வர முயற்சி செய்த போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து குவைத் நாட்டு தம்பதியினர் சுங்க அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது 5 அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

இலங்கையின் விலங்கு கட்டுப்பாட்டு ஒழுங்கு முறைக்கு இணங்க தம்பதியினர் நாட்டிற்கு வருகை தரவில்லை என சுங்கம் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் தாக்குதல் நடத்திய தம்பதியினர் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலங்கை சுங்கம் குறிப்பிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More