இலங்கையில் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் உதவி தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ஆர். கிளார்க் கூப்பர் (R. Clarke Cooper) இதனைத் தெரிவித்தார்.
பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றியும் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா நிதியுதவி அளிக்கும் திட்டங்களின் முன்னேற்ற மதிப்பீடுகள் பற்றியும் அவர் ஆராய்ந்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டில் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்காக 970 மில்லியன் ரூபாவை அமெரிக்கா வழங்கியிருந்தது.
மேலும், எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் கண்ணிவெடிகள் அற்ற நாடாக திகழும் என்ற இலக்கை அடைவதில் இலங்கைக்கு உதவுவதில் பெருமை அடைவதாகவும், அவர் தெரிவித்தார்.
நன்றி – thinakaran