இலங்கையில் கடந்த பத்து வருடங்களில் 27ஆயிரத்து 161பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.
இது முப்பதுவருட யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிகரானதாகும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி. சில்வா தெரிவித்தார்.
சாரதிகளின் கவனயீனமான நடவடிக்கை காரணமாக கடந்த பத்து வருடங்களில் 27ஆயிரத்தி 161பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இந்த உயிரிழப்பானது கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தின்போது உயிரிழந்தவர்களின் தொகைக்கு நிகரானது என்றே தெரிவிக்கப்படுகின்றது.
வீதி விபத்துக்கு தண்டனையை அதிகரிப்பது மாத்திரமன்றி விபத்துக்களை குறைப்பதுதொடர்பாக வெளிநாடுகளுடன் இணைந்து இதனை ஒழுங்குறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
இந்த முறை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இருந்து வருகின்றது. இதற்கு பாதுகாப்பு துறையின் ஒத்துழைப்பும் தேவையாகும்.
அதனால் சாரதி அனுமதி பத்திரத்தை வழங்கும் உரிமையை மோட்டார் வாகன பதிவு தினைணக்களத்துடன் போக்குவரத்து திணைக்களத்துக்கும் வழங்கவேண்டும் என்றார்.
நன்றி – எம்.ஆர்.எம்.வஸீம்