அநுராதபுரம் – தம்புத்தேகம வீதியின் மொரகொட சந்தியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று (30) அதிகாலை 4.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
லொறி ஒன்றுடன் வேன் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் வேனில் பயணித்த மூன்று பெண்கள் உட்பட 6 பேர் அநுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் மூன்று பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
கல்னேவ பகுதியை சேர்ந்த மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.