ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் நாளையுடன் நிறைவடைகின்ற நிலையில் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது அநுர குமார திசாநாயக்க ராஜபக்ஷக்களுடன் சேர்த்து பிரதமர் ரணிலையும் தோற்கடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ஷக்களுடன் சேர்த்து பிரதமர் ரணிலையும் தோற்கடிக்க வேண்டுமென்பதே தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுர குமார திசாநாயக்க குருகையில்,“ராஜபக்ஷக்கள் மீதான பயம் இன்றும் மக்களிடம் உள்ளது. எனினும் கடந்த முறை ராஜபக்ஷக்களை தோற்கடித்தவர்கள் மீண்டும் ராஜபக்ஷக்களையே பாதுகாத்தனர். எனவேதான் இன்று மீண்டும் ராஜபக்ஷக்களை தோற்கடிக்க வேண்டிய போராட்டம் உருவாக்கியுள்ளது. என்றும் ராஜபக்ஷக்களை தோற்கடிப்பதுடன் சேர்த்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் தோற்கடிக்க வேண்டும் என்பதே எமது நோக்கம்.என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தாம் ஆட்சிக்கு வந்தால் மற்றைய ஆட்சியாளர்களை போல் இல்லாது மக்களுக்குக்கடமையாற்றுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.