மட்டகளப்பு சிறைக்கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறைக் கைதியொருவர் உயிரிழந்தமை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு குறிப்பிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையின் கூரைமீது ஏறி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்தார்.இவரது மரணம் தொடர்பில் நீதிபதியே நேரடியாக வந்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே சிறைக்கைதிகள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இவ்வாறு 12 கைதிகள் ஆர்பாட்டத்தில் பங்குகொண்டிருந்துள்ளதுடன், இவர்கள் சிறைச்சாலையின் கூரை மீது ஏறியும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
இதன்போது சிறைச்சாலை வளாகத்தில் பெரும் பதற்ற நிலைமையை ஏற்பட்டிருந்ததுடன்
காய்ச்சல் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த கைதி மேலதிக சிகிச்சைக்காகவே மட்டகளப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ள கைதிகள் நீதிபதியை நேரடியாகவே வந்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பில் தாம் கவனம் எடுப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதாக மட்டகளப்பு பொலிஸார் தெரிவித்தனர்.