Tuesday, May 7, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அம்பாறை மாவட்டத்தின் 4 பகுதிகளுக்குள் பிரவேசிப்பதற்கு தடை.

அம்பாறை மாவட்டத்தின் 4 பகுதிகளுக்குள் பிரவேசிப்பதற்கு தடை.

1 minutes read

வெலிசறை கடற்படை முகாம் உறுப்பினர்கள் நடமாடிய பகுதிகள் குறித்து பாதுகாப்பு மற்றும் சுகாதார பிரிவினர் கவனம் செலுத்தியுள்ளனர்.இதனடிப்படையில், அம்பாறை மாவட்டத்தின் 4 பகுதிகளுக்குள் பிரவேசிப்பதற்கும் அங்கிருந்து வௌியேறுவதற்கும் பொலிஸாரினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

உஹன, தமன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் ரஜவெவ, மடவலலந்த , பஹலலந்த மற்றும் நவகிரியாவ ஆகிய பகுதிகளிலுள்ள மக்களுக்கு அத்தியவசிய தேவைகளுக்காக மாத்திரம் வீடுகளிலிருந்து வௌியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை மாவட்டத்தின் லங்காபுர பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 12 கிராமங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

லங்காபுர , வீரபுர , பூமாடிய, புலஸ்திகம, அபயபுர , சோமபுர , பௌத்தார்தகம , சங்கபோதிகம, அல்ஹிலால் புர, ரிஃபாய்புர , தம்பால, பட்டுநுகம ஆகிய கிராமங்களே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

பூமாடிய கிராமத்தைச் சேர்ந்த 11 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் மட்டக்களப்பிலுள்ள இரண்டு தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More