கம்பஹா பொது வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கம்பஹா, மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு சிகிச்சையளித்த பின்னர் அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவமனையின் துணை இயக்குநர் வைத்தியர் பிரியந்த இலெபெரும (Dr. Priyantha Ileperuma) தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுடன் ஆடை தொழிற்சாலையின் ஊழியர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து மினுவங்கோடவில் வைரஸ் பரவல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தொழிற்சாலையைச் சேர்ந்த ஒரு குழுவினருக்கு தனது தனியார் கிளினிக்கில் குறித்த மருத்துவர் சிகிச்சை அளித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட மருத்துவரை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் பிரியந்த இலெபெரும தெரிவித்துள்ளார்.