ஆள்மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய ஒருவர் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனையூர் மத்திய கல்லூரியில் வெளிவாரியாக பரீட்சை எழுத வருகை தந்த ஒருவரே நேற்று(செவ்வாய்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.
வெருகல் – மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.