1987ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலையின் மீது இந்திய இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் நினைவு நாள் இன்றாகும்.
1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்து இந்திய இராணுவத்தினரால் கடமையில் இருந்த வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் மற்றும் நோயாளர்கள் உட்பட சுமார் 85 பேர் வரையில் படுகொலை செய்யப்பட்டனர்.
இவ்வாறு இறந்தவர்களின் நினைவு தினத்தில், வைத்தியசாலையின் ஊழியர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் எனப் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.