ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள இடங்களில் அத்தியாவசிய சேவை நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள்,
பயணங்களை மேற்கொள்வதில் தடையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.
மின்விநியோகம், தொடர்பாடல் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள், தமது கடமைக்குரிய அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி பயணம் செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாவட்டத்தின் ஆறு பொலிஸ் பிரிவுகளில் நேற்று முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்குளி, முகத்துவாரம் (மோதர) புளுமென்டல், கிராண்ட்பாஸ், வெல்லம்பிட்டி, கொட்டாஞ்சேனை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை தற்போது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தின் 33 பொலிஸ் பிரிவுகளிலும், குருநாகல் மாவட்டத்தின் குளியாபிட்டிய, கிரிஉல்ல, நாரம்மல, தும்மலசூரிய,
பன்னல ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.