Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பூ விற்கும் ஏழைத் தாய் | கைகொடுங்கள் தோழர்களே!

பூ விற்கும் ஏழைத் தாய் | கைகொடுங்கள் தோழர்களே!

1 minutes read

கண்டி வீதியில் (A9), மூன்றுமுறிப்பு பிள்ளையார் கோயில் மணிக்கோபுரத்தடியில் “இரத்தினம்” என்ற பெயருடன் ஒரு வயதில் மூத்த பெண்மணி தினமும் காலை 8 மணி முதல் 3 அல்லது 4 shopping bag நிறைய பூக்களுடன் அமைதியாய் உட்காந்திருப்பார்.

ஒரு பை 50/= . அப் பைகளை விற்பதற்காக ஏறத்தாழ 11 மணிவரை அவ்விடத்திலேயே காலை உணவின்றி அமர்ந்திருப்பார். பெற்றோரை இழந்த தனது பேரப்பிள்ளைகளை வளர்ப்பதற்குத் தன்னால் இயன்றதை பிச்சை எடுக்காது செய்து வருகிறார்.

தினமும் அவ்வாலயத்தில் தரித்து நின்று வணங்கி செல்லும் ஆயிரக்கணக்கானோர் இவரது 50/= உழைப்பிற்கு மரியாதை கொடுத்து அப்பைகளில் ஒன்றை வாங்கி உங்கள் வாகனத்தில் வைக்கலாம் அல்லது பூக்களை கருவறையருகில் வைத்துவிட்டு சென்றால் மத்தியான பூசைக்கு குருக்கள் அதை பாவிப்பார்.

இந்த 50/= அவரது வாழ்க்கைக்கு இன்றியமையாதது. என்னால் தினமும் ஒரு பை வாங்கமுடியும். ஆனால் நான் விடுமுறை எடுக்கும்போதும் வேறு பாதையால் செல்லவேண்டிய தேவை இருக்கும்போதும் அவர் நிலமையை யோசிக்கிறேன்.

அருகிலேயே உள்ள கடையில் பூக்கள் மாலைகள் உண்டு. ஆனால் 4 பை பூக்களுக்கு உதவுவதால் இவர் போட்டியாக வியாபாரத்தை பெருக்கப் போவதில்லை. கடை போடப் போவதுமில்லை , அதற்கு அவரது வயதும் உடல்நிலையும் ஒத்துழைக்காது.

நீங்கள் அதில் ஒரு பையை வாங்கி உதவுவதால் அன்றைய காலை உணவை அவர் சற்று முன்னதாக உண்ண முடியும். அவ்வளவுதான்.!

கை கொடுங்கள் தோழர்களே!

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More