Tuesday, May 21, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அமைச்சர்கள் வருகையால் கொரோனா தொற்றும் என்ற அச்சம் தேவையற்றது

அமைச்சர்கள் வருகையால் கொரோனா தொற்றும் என்ற அச்சம் தேவையற்றது

2 minutes read

அமைச்சர்கள் வருகையால் கொரோனா தொற்றும் என்ற அச்சநிலை தேவையற்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டும் அனைத்து சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றியுமே வந்திருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பியிருந்த கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “கொரோனா வைரஸ் தொற்றானது இலங்கையில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரவியுள்ள ஒரு தொற்றாகும்.

இந்நிலையில், இலங்கையில் குறித்த தொற்று இவ்வாண்டின் முற்பகுதியில் ஏற்பட்டபோது அதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொண்டு கட்டுப்படுத்தியிருந்தது.

ஆனாலும், ஒரு சில காரணங்களால் அத்தொற்று இலங்கையில் மீண்டும் பரவியுள்ளது. இதையும் அரசாங்கம் கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை அனைத்து மக்களிடையேயும் உண்டு.

அதேபோல், இத்தொற்று ஒரு சிலரது தொழிற்றுறையை மட்டும் பாதித்திருக்கவில்லை. இது அனைத்து உழைப்பாளிகளையும் பாதித்துள்ளது.

அத்துடன், கடலுணவில் இது பரவுவதாக சிலரது போலிப் பிரசாரங்களால் மக்களிடையே கடலுணவு விற்பனையில் சிறு பின்னடைவு காணப்பட்டது. ஆனாலும், இது மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவுவதால் நோயுற்ற ஒருவர் மரக்கறி வகைகளைத் தொட்டாலும் அதனூடாக பரவும் என்பதே உண்மை நிலையாகும்.

இதேவேளை, நேற்று நடைபெற்ற நிகழ்வானது இம்மாவட்ட மக்களின் நலன்களை முன்னிறுத்தியே நடத்தப்பட்டது. இது ஒரு களியாட்ட நிகழ்வல்ல. இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கோரி எவரையும் வற்புறுத்தியும் அழைத்திருக்கவில்லை.

அத்துடன், இந்நோய்த் தொற்றை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் சுகாதார தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்நிகழ்வு நடைபெற்றதால் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

அனைத்து அமைச்சர்களும் அவர்களுடன் வருகைதந்தோரும் சுகாதார முறைகளைப் பின்பற்றி சுகாதாரப் பிரிவினரின் அனுமதியுடனேயே வருகை தந்திருந்தனர்” என தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More