சமஸ்டியை எதிர்த்தவர்கள் இன்று எதையாவது தாருங்கள் என கோருமளவிற்கு தமிழ்த் தலைமைகள் வந்துவிட்டன என என கேட்பது வேடிக்கையான விடயம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடமை்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கு இப்போது இருக்கின்ற தமிழ் தலைமைகள் எவ்விதமான முயற்சியையும் முன்னெடுக்கவில்லை. காலங்களிலும் இவர்கள் அதை எடுக்கப்பபுாவதில்லை. சமஸ்டி தீர்வைக்கூட காலம் காலமாக எதிர்த்தவர்கள் இப்போது எதையாவது தாருங்கள் என்று கேட்பது வேடிக்கையான விடயமாகும். தமிழ் மக்களிற்கான பிரச்சினை தீர்வாக 1949ம் ஆண்டிலேயே சமஸ்டி பற்றி பேசப்பட்டது. காலப்போக்கில் சமஸ்டி முறையிலான தீர்வை வழங்குவதற்கு சிங்கள தலைவர்களும் சிங்கள மக்களும் இணங்கியிருந்தார்கள்.
குறித்த காலப்பகுதியில் ரணில் விக்ரமசிங்க சமஸ்டி தீர்வை முன்வைத்து தேர்தலில் களமிறங்கினார். ஆனால் தமிழ் தலைமைகள் அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர். ரணில் விக்ரமசிங்க ஒருலட்சம் வாக்குகளால் தோல்வியடைந்தார். அப்புாது சமஸ்டி கிடைத்திருந்தால் இன்று 10 ஆண்டுகளிற்கு மெல் சமஸ்டி தீர்வு கிடைத்திருக்கும்.அப்போது அதனை ஏற்றுக்கொள்ளாத எமது தலைமைகள் இப்போது எதையாவது தாருங்கள் என்று கேட்கின்றார்கள் என்பது வேடிக்கையான விடயம் என குறிப்பிட்டார்.