Tuesday, May 7, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வாழ்வாதார உதவி வழங்கிய பச்சிலைபள்ளி தவிசாளர்

வாழ்வாதார உதவி வழங்கிய பச்சிலைபள்ளி தவிசாளர்

1 minutes read

இந்திராபுரம் பகுதியில் இரு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பத்திற்கு பச்சிலைபள்ளி தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களின் ஒழுங்கமைப்பில் ஏர்நிலம் அமைப்பின் ஊடக வாழ்வாதார உதவியாக குழாய் கிணறு மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் என்பன வழங்கப்பட்டுள்ளது

தனது இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்படட நிலையில் ஒரு சிறுநீரகத்தை அவரது மனைவியிடம் இருந்து பெற்று இரண்டு பெண்பிள்ளைகள், ஒரு பாடசாலை செல்லும் மகனுடன் வாழ்ந்துவரும் முயற்சி மிக்க விவசாயக் குடும்பத்திற்கு
ஜேர்மன் வாழ் தமிழுறவு ரதிபிரபா அவர்களின் மகள் திலீபன்-தீபா அவர்களின் கலைத்திறமையால் (சித்திரம் வரைதல்) பெற்ற நிதியில் “ஏர் நிலம்” இவ் உதவியை புரிந்தது.

இந் நிகழ்வில் பச்சிலைபள்ளி தவிசாளருடன் உப தவிசாளர் உறுப்பினர்கள் என பலரும் உடனிருந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More