Tuesday, May 7, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வவுனியாவில் மனைவியை காணவில்லை கணவன் முறைபாடு

வவுனியாவில் மனைவியை காணவில்லை கணவன் முறைபாடு

1 minutes read

தனது, மனைவியை காணவில்லை என கணவரொருவர், வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.     

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கணவன், வவுனியா, வெளிக்குளம் பகுதியை சேர்ந்த  22 வயதுடைய ராஜா வினிதா என்ற தனது மனைவி கடந்த 13 ஆம் திகதி மாலை அவரது தாயாரின் வீட்டிலிருந்து உறவுக்காரர்களிடம் சென்றுவருவதாக தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். குறித்த நேரத்தில் நான் உறங்கிக்கொண்டிருந்தமையால் அவர்கள் சென்றதை அறிந்திருக்கவில்லை.

எனினும் நீண்ட நேரம் ஆகியும் மனைவி வீட்டிற்கு வராதமையினால் அவர் சென்றதாக தெரிவிக்கப்படும் உறவினர் வீடுகளில் சென்று பார்த்த போது அவர் அங்கு வரவில்லை என தெரிவித்தனர். அவரது தொலைபேசியும் இயங்கவில்லை. இந்நிலையில் வவுனியா பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.  

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த பெண் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள், கணவனின்  0769080042 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More