கிளிநொச்சி- இரணைதீவு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று வட.மாகாண ஆளுநர் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.
இரணைதீவு பகுதியில் தொழில் செய்வதற்கான அனுமதி மற்றும் போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்படுவதில்லை என தெரிவித்து மக்களினால்போராட்டமொன்று அண்மையில்முன்னெடுக்கப்பட்டதுடன் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.
இந்நிலையிலேயே அவ்விடயம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இப்பிரச்சினையை ஆராயும் கலந்துரையாடல் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றுள்ளது.
இதில் கடற்படை அதிகாரிகள், பூநகரி பிரதேச செயலாளர், பிரதேச சபையினர், துறைமுக அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.