Tuesday, May 7, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 9 மரணங்கள்

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 9 மரணங்கள்

1 minutes read

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 9 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 95 வயதான ஆண்ணொருவரும் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 61 வயதான பெண்ணொருவரும் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஆண்ணொருவரும் இவ்வாறு கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு, நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண்ணொருவருவரும் கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 45 வயதான பெண்ணொருவரும் யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த 76 வயதான பெண்ணொருவருவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஹொரணை பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஆண்ணொருவரும் குருதெனிய பகுதியைச் சேர்ந்த 42 வயதான ஆண்ணொருவரும் மாவனெல்ல பகுதியைச் சேர்ந்த 73 வயதான ஆண்ணொருவருவரும் இவ்வாறு கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 365ஆக அதிகரித்துள்ளது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More