Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நானுஓயா பஸ் விபத்தில் 13 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி!

நானுஓயா பஸ் விபத்தில் 13 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி!

1 minutes read

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று(22.02.2021) மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொனராகலை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு மரண வீடு ஒன்றுக்காக சென்று கொண்டிருந்த போது, ரதல்ல குறுக்கு வீதியில் வைத்து முன்னே சென்ற பவுசர் ரக வானகத்துடன் மோதி, இழுத்துச் சென்று மண்மேட்டில் மோதுண்டே குறித்த பஸ் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான பஸ்ஸில் 18 பேர் பயணித்துள்ளதுடன், இதில் 13 பேர் பலத்த காயங்களுடன் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More