Tuesday, May 7, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அதிபர், ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் மாதாந்த கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி!

அதிபர், ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் மாதாந்த கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி!

1 minutes read

அதிபர் – ஆசிரியர்களுக்கான சம்பளப் பிரச்சினைக்கு அடுத்த வரவு -செலவுத் திட்டத்தில் தீர்வு வழங்கப்படும் வரை இந்தத் தொகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இணையவழி முறைமையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேநேரம், ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு முன்வைத்த யோசனைக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் அமைச்சரவையின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் இன்று கூடி ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More