Tuesday, April 16, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கட்சிக்குள் நெருக்கடி இல்லை, மறுசீரமைப்பு பணிகள் மும்முரமாக இடம்பெறுகின்றன!

கட்சிக்குள் நெருக்கடி இல்லை, மறுசீரமைப்பு பணிகள் மும்முரமாக இடம்பெறுகின்றன!

1 minutes read

சுதந்திரக் கட்சிக்குள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கட்சியில் அவ்வாறான நெருக்கடிகள் எதுவும் இல்லையெனவும், 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் மத்திய குழு, அமைப்பாளர்கள் மற்றும் கிராம உறுப்பினர்கள் அனைவரும் இதே கருத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது கட்சியை மறுசீரமைக்கும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் இதற்காக கட்சியின் தலைவர்கள் கிராம மட்டங்களிலும் பிரதேச மட்டங்களிலும் கூட்டங்களை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

சிலர் கட்சி மறுசீரமைப்பு தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும், இருப்பினும் சுதந்திரக் கட்சி அது பற்றி பொருட்படுத்தவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பல அரசியல் தலைவர்களுக்கு கிராமங்களுக்கு செல்வதில் பல பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, சுதந்திர கட்சிக்கு அவ்வாறானதொரு நிலை ஏற்படவில்லை என்றும் பெருமிதம் வெளியிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More