அமெரிக்காவின் தமிழுக்கு உயர் அங்கீகாரம் கிடைத்துள்ள செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
இதன்படி அமெரிக்காவில் முதல் முறையாக வீதி ஒன்றுக்கு திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட இருக்கிறது.
உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப்பிக்கும் வகையில், தமிழகத்தில் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், வீதிகளுக்கு திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
எனினும் இந்தியாவை கடந்து, அமெரிக்காவில் முதல் தடவையாக வீதி ஒன்றுக்கு திருவள்ளுவரின் பெயர் சூட்டப்படவுள்ளது.
அமெரிக்காவின் வேர்ஜினியா மாகாணத்தில் உள்ள பேர்பேக்ஸ் பகுதியில் இந்த வீதி அமைந்துள்ளது.
இது, ஆங்கிலத்தில் ‘Valluvar Way’ என்றும் தமிழில் ‘வள்ளுவர் தெரு’ என்றும் அழைக்கப்படும் என்று வேர்ஜினியா சபை பிரதிநிதி டொன் ஹெல்மர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.