Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஒட்டுசுட்டானில் 200 பயனாளிகளுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு!

ஒட்டுசுட்டானில் 200 பயனாளிகளுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு!

1 minutes read

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட மக்களுக்கான காணி உறுதிப் பத்திரம் மற்றும் நீதியமைச்சின் கீழ் இயங்கும் இழப்பீட்டு அலுவலகத்தினூடாக யுத்தத்தால் ஏற்பட்ட சொத்திழப்புக்கான இழப்பீட்டு காசோலை ஆகியன வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கையின் 74ஆவது சுதந்திர தினமான நேற்று ஒட்டுசுட்டான் பிரதேசச் செயலக கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

ஒட்டுசுட்டான் பிரதேசச் செயலாளர் திருமதி. ஜெயவதனி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சுமார் 200 பயனாளிகளுக்கான காணி அனுமதி பத்திரங்களும் 30 பயனாளிகளுக்கான இழப்பீட்டு காசோலையும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தானினால் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பயனாளிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More