ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அலுவலகம் மீது முட்டை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் மதுரவித்தானகே தனது ஆதரவாளர்களுடன் இணைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
புறக்கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதான அலுவலகத்தின் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் முதலில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். கடந்த அரசாங்கத்தின் ஆட்சியின் போது மக்களுக்கு என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்பி இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் மீது எதிர்ப்பு பதாதைகளும் ஒட்டியமையினால் பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.