தற்பொழுது நாட்டில் ஏற்ப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் டோக்கன் முறையில் எரிபொருள் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அவ்வாறு டோக்கன் பெற்றவர்களுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது. அத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் வழங்கப்படுவதன் காரணமாக வாடகை வாகன சாரதிகள் நாளாந்தம் பல மணிநேரம் எரிபொருள் பெறுவதற்கு வரிசையில் நிற்பதாக தெரிவிக்கின்றனர்.
இதனால் தமது நாளாந்த வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.