நாளை (19) மற்றும் நாளைமறுதினம் (20) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W ) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,
ஏப்ரல் 18: இரு கட்டங்களில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிட நேர மின்வெட்டு:
ABCDEFGHIJKL | PQRSTUVW :
– மு.ப. 9.00 – பி.ப. 5.00 வரை 2 மணித்தியாலங்கள்
– பி.ப. 6.00 – இரவு 9.00 வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்
மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, ஏப்ரல் 13, 14, 15 ஆகிய 3 நாட்களிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.
போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.