Tuesday, March 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வைத்தியர் சத்தியமூர்த்தி எடின்பரோ மரதன் நிகழ்வில் கலந்துகொள்கின்றார்

வைத்தியர் சத்தியமூர்த்தி எடின்பரோ மரதன் நிகழ்வில் கலந்துகொள்கின்றார்

1 minutes read

யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி ஐக்கிய இராச்சிய ஸ்கொட்லாந்து நாட்டில்  நடைபெற உள்ள எடின்பரோ மரதன் நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கின்றார். இம்மாதம் 29ம் திகதி நடைபெற உள்ள உலகப் புகழ் பெற்ற எடின்பரோ மரதன் நிகழ்வில் உலகிலிருந்து ஏராளமானவர்கள் கலந்துகொள்கின்றார்கள். சுமார் 42 கிலோமீட்டர் தூரத்தினை 3 மணித்தியாலங்களில் ஓடி முடிக்கவேண்டி உள்ளது. 

எதிர்வரும் ஜூலை மாதம் இலண்டனில் நடைபெற உள்ள கிளி மக்கள் அமைப்பின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வை முன்னிட்டு எடின்பரோ மரதன் நிகழ்வில் கலந்துகொண்டு நிதி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். கிளி பீப்பிள் அமைப்பினால் தாயாக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. 

கிளி மக்கள் அமைப்பினால் 2019ம் ஆண்டு நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்வில் வைத்தியர் சத்தியமூர்த்திக்கு மண்ணின் மைந்தன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது தெரிந்ததே. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More