Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை வழங்க மேலும் 50 நாட்கள் காத்திருக்க வேண்டாம்

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை வழங்க மேலும் 50 நாட்கள் காத்திருக்க வேண்டாம்

1 minutes read

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை வழங்க மேலும் 50 நாட்கள் காத்திருக் வேண்டாம் என அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

காலிமுகத் திடல் கோட்டா கோ கம போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்கள் நிறைவடைந்துள்ளமை தொடர்பில் டுவிட்டரில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை வழங்க மேலும் 50 நாட்கள் காத்திருக்க வேண்டாம்:கோட்டா கோ கம போராட்டம் தொடர்பில் சனத் ஜயசூரிய

கொழும்பு காலிமுகத் திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு இன்றுடன் 50 நாட்கள் பூர்த்தியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி இளைஞர்களும், யுவதிகளும் காலிமுகத் திடலில் போராட்டத்தை ஆரம்பித்ததுடன் போராட்டம் நடத்தும் இடத்திற்கு கோட்டா கோ கம என பெயரிட்டனர்.

இது தொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள சனத் ஜயசூரிய, 50 நாட்கள் என்பது போராட்டகாரர்களுக்கும் நாட்டிற்கும் கடினமான நாட்கள் எனவும் கூறியுள்ளார்.

“கோட்டா கோ கம போராட்டகார்கள் மற்றும் நாட்டுக்கும் கடந்த 50 நாட்கள் மிகவும் நீண்ட கடினமான நாட்கள். அரசியல்வாதிகளே தயவு செய்து நாங்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை வழங்க மேலும் 50 நாட்கள் காத்திருக்க வேண்டாம்.

காடு இருளாகவும் ஆழமாகவும் இருக்கின்றது என்று நான் ம்ககளுக்கு கூறுகிறேன். எனினும் நாம் உறங்குவதற்கு முன்னர் பல மைல்கள் செல்ல வேண்டும் என்பது உறுதி “எனவும் சனத் ஜயசூரிய டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More