Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தலைநகரில் பாரிய போராட்டம்!

தலைநகரில் பாரிய போராட்டம்!

1 minutes read

உலக வர்த்தக மையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கண்ணீர்புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தை பதவிவிலகுமாறு வலிறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் இன்று 50 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது.

இந்தநிலையில் கொழும்பு வர்த்தக மையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்ற போது அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தப்போராட்டம் கொழும்பு கொளுப்பிட்டி பகுதியில் ஆரம்பித்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இப்போராட்டத்தில் மதகுருமார்கள், தொழிற்சங்கத்தினர், கலைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எனப் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றன நிலையிலேயே இப் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸார் குவிப்பு
ஜனாதிபதி மாளிகையை நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணியை செல்ல விடாமல் தடுப்பதற்காக கொழும்பு லோட்டஸ் வீதியில் அதிக எண்ணிக்கையிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காலிமுகத்திடலில் கோட்டா கோ கம எதிர்ப்புத் தளம் நிறுவப்பட்டு 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில், ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி, கொழும்பு உலக வர்த்தக மையத்துக்கு அருகில் எதிர்ப்பில் ஈடுபட்டு வருகிறது.

யோர்க் வீதி, பேங்க் வீதி மற்றும் செத்தம் வீதி உட்பட சில வீதிகளுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More