வன்னி தமிழ் மக்கள் ஒன்றியமும் தவமணி அறக்கட்டளை இணைந்து நடைமுறைப்படுத்தும் பசுமையாக்கும் செயற்திட்டம்
திருகோணமலை சல்லி/அம்பாள் மகா வித்தியாலயம், சல்லி/ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், சல்லி/ஸ்ரீ கடற்கரை பிள்ளையார் ஆலயம், சரஸ்வதி முன்பள்ளி ஆகிய இடங்களில் இலுப்பை, கமுகு, வில்வம்,புங்கை விளும்பிலி போன்ற பயனுள்ள மரக்கன்றுகள் நாடப்பட்டது
இந்த நிகழ்விற்கு தவமணி அறக்கட்டளையின் ஸ்தாபகர் திரு சியாமலேஸ்வரன் அண்ணா அவர்கள் நேரடியாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நாட்டினார்
இதனை வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தின் ஸ்தாபகர் தரன் ஸ்ரீ அண்ணா அவர்கள் ஒழுங்கமைத்தார்
அத்துடன் கௌரவ பிரதேச சபை உறுப்பினர் தயானந்ததாஸ் அண்ணா , வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் திரு முறிகண்டி லக்சிதரன், திரு ரோபட் அண்ணா , செல்வி பிரதிஷா, செல்வன் நிலோஜன் போன்ற பசுமை ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு பயனுள்ள மரக்கன்றுகளை மண்ணுக்கு பரிசளித்தனர்
முழுமையான அனுசரனையை தவமணி அறக்கட்டளையால் வழங்கப்பட்டது
மண்ணில் ஒரு மரக்கன்றை விதைப்பதை விட பலருடைய மனங்களில் பசுமையை விதைத்து விட்டால் அவர்கள் ஆயிரம் மரக்கன்றுகளை விதைப்பார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்ச்சியாக பசுமை விதைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.