Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை திலினி விவகாரம்: ஞானசாரரைத் துருவியது சி.ஐ.டி.

திலினி விவகாரம்: ஞானசாரரைத் துருவியது சி.ஐ.டி.

1 minutes read

பாரிய நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காகப் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சி.ஐ.டி.) சென்று வந்துள்ளார்.

அவரிடம் இரண்டரை மணித்தியாலங்கள் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன என்று அவர் இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு சென்றிருந்த அவர் பிற்பகல் 5.30 மணியளவில் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

கடந்த தினம் ஊடகங்களில் வெளியான திலினி பிரியமாலியின் தொலைபேசி உரையாடலில், கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதையடுத்தே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More