ஈழத்தமிழர்களின் பிரிந்து செல்லக்கூடிய சுயநிர்ணய உரிமையை தொடர்ச்சியாக ஆதரித்து வரும் சோசலிச கட்சி வருடம் தேறும் நடாத்தும் Socialism 2022 நிகழ்விவில் “இலங்கையின் நெருக்கடி – உண்மையான மாற்று என்ன ? ” என்ற தொனிப்பொருளில் தமிழ் சொலிடாரிட்டி கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கின்றது.
இந் நிகழ்வில் இலங்கை அரசிற்கு எதிரான அரகலய போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய போராளியும் மக்கள் சபையின் முன்ணனி செயற்பாட்டாளருமான பிரசாத் வலிகம்புர கலந்து கொள்கிறார். இலங்கையின் சமகால நிகழ்வுகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை அவருடன் பகிர்ந்து கொள்ள முடியும். அத்தோடு நூற்றுக்கணக்கான , சோசலிச வர்க்கப் போராளிகளை சந்தித்து, கற்றுக்கொள்ள மற்றும் கருத்துக்களை பற்றி விவாதிக்க இந்த நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.