Tuesday, May 7, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வட மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

வட மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

1 minutes read

வட மாகாண கல்வி அமைச்சினுடைய  நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வட மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் தற்போது கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு ஆளுநரே மோசடிகளுக்கு ஆதரவா? பேஸ்புக் செயலாளர் வடக்கு கல்வியில் எதற்கு? வடக்கு கல்வியை திருடர்களின் கூடாரமாக்காதே! , அடிமைச் சேவகம் புரியும் தொழிலாக ஆசிரியத்தை மாற்றாதே! போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் சற்றுமுன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்குள் அழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More