Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழகத்துக்குள் நுழைந்தாரா கஞ்சிப்பானை?

தமிழகத்துக்குள் நுழைந்தாரா கஞ்சிப்பானை?

1 minutes read

திட்டமிட்ட குற்றக் கும்பல் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் தலைவன் என அழைக்கப்படும் ‘கஞ்சிப்பானை இம்ரான்’ எனும் முகமது நஜீம் முகமது இம்ரான் இலங்கையிலிருந்து தமிழகத்துக்குள் நுழைந்ததாக ‘த இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கிறிஸ்மஸ் நாள் அன்று ராமேஸ்வரம் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையில் கஞ்சிப்பானை இம்ரானும் அவரது சகாவும் இறங்கியதாகவும், இது தொடர்பாக அவதானமாக இருக்குமாறு தமிழகம் முழுவதும் உள்ள மூத்த பொலிஸ் அதிகாரிகளை உளவுத்துறை எச்சரித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொலை, கொலை அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த இம்ரான், கடந்த 2019ஆம் ஆண்டு டுபாயில் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டு, தலா 5 மில்லியன் ரூபா மதிப்பிலான இரண்டு ஆள் பிணைகளில் கடந்த 20ஆம் திகதி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

பிணையில் வெளிவந்த இம்ரான் இந்தியாவுக்குள் நுழையத் திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்புகள் மற்றும் நம்பகமான ஆதாரங்களில் இருந்து தமிழக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக ‘த ஹிந்து’ தெரிவித்துள்ளது.

கஞ்சிப்பானை இம்ரான் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றது குறித்து இலங்கை இன்னும் குறிப்பிட்ட பதிலை அளிக்கவில்லை என்றும், இந்தியப் புலனாய்வு அமைப்புகள் கஞ்சிப்பானை இம்ரான் தங்கள் நாட்டுக்குள் நுழைந்தமை குறித்த உண்மைகளை நம்பகமான ஆதாரங்கள் மூலம் உறுதி செய்துள்ளதாகவும் ‘த இந்து’ செய்தியில் சுட்டிக்காட்டபட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More