Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜூனுக்குப் பின்பே இலங்கைக்கு விடிவு! – ஐ.தே.க. நம்பிக்கை

ஜூனுக்குப் பின்பே இலங்கைக்கு விடிவு! – ஐ.தே.க. நம்பிக்கை

1 minutes read

“இலங்கையின் நிலைமை மே – ஜூன் மாதமளவில்தான் ஓரளவு சரிவரும் என்று நம்புகிறேன்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை பற்றி கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உண்மையில் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். அதற்குக் காரணம் கடந்த ஆட்சியில் இடம்பெற்ற பிழையான பொருளாதார முறைமைதான்.

எதிர்வரும் ஏப்ரல் புதுவருடம் மக்களுக்குச் கஷ்டமாகவே இருக்கும். மே – ஜூன் மாதமளவில்தான் நிலைமை ஓரளவு சரிவரும் என்று நம்புகின்றேன்.

இருந்தாலும், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவியைப் பாரமேற்கும்போது இருந்த நிலைமையை விட நல்ல நிலைமை இப்போது உள்ளது” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More