கொழும்பைச் சுற்றியுள்ள பல வீதிகள் இன்று பிற்பகல் 3 மணி முதல் மூடப்பட்டுள்ளன என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நாளை நடைபெறவுள்ள 75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று நடைபெறவுள்ள கலாசார இசை நிகழ்ச்சி முடியும் வரை குறித்த வீதிகள் மூடப்பட்டிருக்கும்.
நிதஹஸ் மாவத்தை, நிதஹஸ் சுற்றுவட்டத்தில் இருந்து சுதந்திர சதுக்கத்தை நோக்கிய வீதி, பதனம் மாவத்தை, ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தை சந்தியில் இருந்து பதனம் மாவத்தை நோக்கிய நுழைவு, பிரேமகீர்த்தி டி அல்விஸ் மாவத்தை, தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திலிருந்து சுதந்திர சதுக்கத்தை நோக்கி நுழைவு ஆகிய பகுதிகள் இவ்வாறு மூடப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.