தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சலுகைகளை வழங்கவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்பு விடுத்துள்ளார்.
கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சலுகைகளை வழங்கவும், மத ஸ்தலங்கள் மற்றும் அரச கல்வி நிறுவனங்களுக்கு சூரிய மின்சக்தி அமைப்புகளை வழங்கவும் ஜனாதிபதி மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மின் கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு சலுகைகள் வழங்கவும், மத ஸ்தலங்கள் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கு சூரிய ஒளி அமைப்புகளை வழங்கவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.