Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சர்வாதிகாரியே ரணில்! – போட்டுத் தாக்கினார் அநுர

சர்வாதிகாரியே ரணில்! – போட்டுத் தாக்கினார் அநுர

1 minutes read

“ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி அல்ல; அவர் ஒரு சர்வாதிகாரி. அதை அவர் தனது நடவடிக்கைகள் மூலம் நாள்தோறும் வெளிப்படுத்தி வருகின்றார்.”

– இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

இரத்தினபுரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களின் அலையைக் கண்டு ரணில் – ராஜபக்ச கூட்டணியினரும், சஜித் பிரேமதாஸ அணியினரும் கதிகலங்கி நிற்கின்றனர்.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசமைப்பையும், சட்டங்களையும் மீறி தேர்தலை ஒத்திவைக்க முயல்கின்றார்.

தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்த எதிரணி எம்.பிக்களின் விபரங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More