கிளி பீப்பிள் அமைப்பின் அம்மா திட்டத்தின் கீழ் மக்களைத் தேடி மருத்துவம் எனும் எண்ணக் கருவில் மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவத் தேவைக்காக தாய் ஒருவருக்கு ஐம்பதாயிரம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.
தாயகத்திற்கு வருகை தந்த கிளி பீப்பிள் அமைப்பின் தலைவர் துறைவன் கிளி பீப்பிளின் தாயக அலுவலகத்தில் நேற்றைய தினம் முதல் கட்ட உதவியை வழங்கி அம்மா திட்டம் – மக்களை தேடி மருத்துவம் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
கிளி பீப்பிள் அமைப்பின் அம்மா திட்டம் -மக்களை தேடி மருத்துவத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் பின் தங்கிய பகுதிகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது குழந்தைகளின் மருத்துவம், போசாக்கின்மைக்கான மருத்துவம், முதியர்களுக்கான மருத்துவ தேவைகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை வழங்கும் திட்டமே மக்களைத் தேடி மருத்துவம் ஆகும்.