Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளி முருகானந்தா கல்லூரியில் பௌதிகவியல் பாட செயன்முறை கருத்தரங்கு

கிளி முருகானந்தா கல்லூரியில் பௌதிகவியல் பாட செயன்முறை கருத்தரங்கு

2 minutes read

கிளிநொச்சி மகா வித்தியாலய பழைய மாணவர்களின் ‘எழுகை’ அமைப்பின் ‘அகவொளி’ கல்விக்கான செயற்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி வடக்கு வலயத்தை சேர்ந்த உயர் தர மாணவர்களுக்கான பெளதீகவியல் செயன்முறை கருத்தரங்கம் இன்று கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் இடம்பெற்றது.

இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இக் கருத்தரங்கின் இரண்டாம் கட்ட செயற்பாடு தொடர்ந்து நாளைய தினம் இடம்பெறவுள்ளது. 2023இல் உயர் தரப் பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களின் அடைவுமட்ட மேம்பாட்டை கருத்தில் கொண்டு மாணவர்களின் ஈடுபாட்டை அதிரிக்கும் விதமாக கவர்ச்சிகரமான முறையில் இக் கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

கிளிநொச்சி மகா வித்தியாலய பழைய மாணவர்களின் ‘எழுகை’ அமைப்பின் ‘அகவொளி’ கல்விக்கான செயற்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தின் கண்காணிப்பில் கிளிநொச்சி வடக்கு மற்றும் தெற்கு வலயத்தை சேர்ந்த வளவாளர்களின் பங்களிப்பில் இக் கருத்தரங்கு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More