கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் அமைந்துள்ள முருகானந்தா கல்லூரியில் இன்றைய தினம் மூன்று கருத்தரங்குகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது நாளாகவும் கருத்தரங்கு
கிளிநொச்சி மகா வித்தியாலய பழைய மாணவர்களின் ‘எழுகை’ அமைப்பின் ‘அகவொளி’ கல்விக்கான செயற்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி வடக்கு வலயத்தை சேர்ந்த உயர் தர மாணவர்களுக்கான பெளதிகவியல் செயன்முறை கருத்தரங்கம் இன்று இரண்டாவது நாளாகவும் கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் இடம்பெற்றது. இதன் போது கிளிநொச்சி வடக்கு வலயக் கல்வி பணிப்பாளர் திரு சிவனருள்ராஜா அவர்கள் வருகை தந்தார். உடன் பிரதிக் கல்வி பணிப்பாளர் திரு அருந்தவச்செல்வமும் வருகை தந்தார்.