Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மீண்டும் இரத்தக்களரியை விரும்புகின்றாரா கஜேந்திரகுமார்? – வீரசேகர கேள்வி

மீண்டும் இரத்தக்களரியை விரும்புகின்றாரா கஜேந்திரகுமார்? – வீரசேகர கேள்வி

1 minutes read

தனிநாடு கோரி நாட்டில் மீண்டும் குருதிக்களரியை ஏற்படுத்தவா கஜேந்திரகுமார் முயல்கின்றார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர.

தமிழர்கள் ஒற்றையாட்சியைக் கோருகின்றார்களா? சமஷ்டியாட்சி கோருகின்றார்களா? தனி நாட்டைக் கோருகின்றார்களா? என்பதை அறிய துணிவு இருந்தால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் சவால் விடுத்திருந்தார். இது தொடர்பில் சரத் வீரசேகர எம்.பி. ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்தக் கருத்தை முன்வைக்கும் கஜேந்திரகுமார் எந்த நாட்டிலிருந்து கூறுகின்றார் என்பதை முதலில் உணர்ந்துகொள்ளவேண்டும். தனிநாடு கோரிய விடுதலைப்புலிகளுக்கு இறுதியில் என்ன நடந்தது என்பது அவருக்குத் தெரியும்.

விடுதலைப்புலிகளின் இந்த அபரிமித ஆசையால் தான் பெருமளவான அப்பாவித் தமிழ் மக்கள் உயிரிழக்கவேண்டி வந்தது.

மீண்டும் தனி நாடு கோரி குருதிக்களரியை ஏற்படுத்த கஜேந்திரகுமார் விரும்புகின்றாரா? இது ஒற்றையாட்சியுள்ள பௌத்த – சிங்கள நாடு. இங்கு சமஷ்டிக்கோ, தனிநாட்டுக்கோ இடமில்லை.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More