இலங்கை மீனவர்கள் ஐவரை இந்தியக் கரையோரக் காவல் படையினர் கைது செய்தனர்.
மன்னாரில் இருந்து 4930 இலக்கப் படகில் கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர்களே எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் இன்று மதியம் கைதாகினர்.
இவ்வாறு கைதான இலங்கை மீனவர்கள் ஐவரும் தனுஸ்கோடிக் கொண்டு செல்லப்பட்டு தமிழகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
எல்லை தாண்டி வந்த இலங்கை மீனவர்கள் கடற்றொழிலுக்கு வந்தார்களா அல்லது கடத்தல் நடவடிக்கைக்காக வந்தார்களா என்பது தொடர்பில் தமிழகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.