Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மட்டக்களப்பில் குடும்பஸ்தர் பாம்பு தீண்டி மரணம்!

மட்டக்களப்பில் குடும்பஸ்தர் பாம்பு தீண்டி மரணம்!

1 minutes read
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்லிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.

பிள்ளையார் கோயில் வீதி, பட்டிப்பளை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தவராசா திலகராஸ் (வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது பிள்ளையின் பிறந்தநாளுக்காக உணவுப்பொருட்கள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வீதியின் அருகில் நின்ற பாம்பு தீண்டியதில் அவர் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வேண்டுகோளுக்கமைவாக சம்பவ இடத்துக்குச் சென்ற மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார், சடலத்தைப் பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரிக்குப் பரிந்துரைத்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More