அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற விமான விபத்தில் விமானி சம்பவ இடத்தஉயிரிழந்தார். டோரன்ஸ் நகரில் இருந்து உப்லண்ட் நகருக்கு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் விமானி மட்டும் இருந்துள்ளார்.
குறித்த விமானம் சான் பெர்னார்டினோ நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் மிகவும் தாழ்வாக பறந்த விமானம் அங்குள்ள வீட்டின் மேற்கூரையை உடைத்து கொண்டு உள்ளே விழுந்தது.
விமானம் தீப்பிடித்ததன் காரணத்தால் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் விமானி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். மேலும் வீட்டுக்குள் இருந்த ஒரு குழந்தை உட்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விபத்துக்கா னகாரணம் இதுவரையில் கண்டுபிக்கப்படவில்லை எனவும்,அதுகுறித்துவிசாரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.