ஈரான் தளபதி குவாசிம் சுலைமானியை அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்கி கொலை செய்யப்பட்டதால், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் அமெரிக்கர்களை தாக்கினால் புதிய விதமான ஆயுதத்தால் தாக்குவோம் என்று ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குவாசிம் சுலைமானியின் உயிருக்கு நிச்சயம் ஒரு பழிவாங்கல் இருக்கு என்று ஈரான் கூறியுள்ளதால், அமெரிக்கா, பாக்தாத்தில் தன்னுடைய இராணுவ படைகளை குவித்து வருகிறது.
இந்நிலையில் டிரம்ப் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அமெரிக்கா இராணுவத்திற்காக மட்டுமே 2 டிரில்லியன் டொலர் செலவு செய்துள்ளது.உலகின் மிகப்பெரிய மற்றும் சிறந்த இராணுவம் நாங்கள் தான், ஈரான் அங்கிருக்கும் அமெரிக்க தளம் மற்றும் அமெரிக்கர்களை தாக்கினால், தயக்கமின்றி புதிய விதமான ஆயுதத்தால் தாக்குவோம் என்று எச்சரித்துள்ளார்.