துருக்கியின் கிழக்கு மாகாணமான எலாசிக் பகுதியில் 6.8 ரிக்டர் என பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 18 பேரின்உயிரிழந்ததுடன் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேலும் கட்டிடங்களின் இடிபாடுகளில் சுமார் 30 பேர் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள்தகவல் வெளியிட்டுள்ளனர்.
அருகிலுள்ள மாகாணங்களில் இருந்து மீட்புக் குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கடும் குளிரில் விளக்குகளுடன் இருட்டில் மீட்புக் குழுக்கள் பணியாற்றிவருவதாக கூறும் பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகர், துருப்புக்களும் உதவ தயாராக உள்ளனர் என்றார்.
அதுமட்டுமன்றி ஆபத்தான நிலையில் இருக்கும் 11 பேர் உட்பட மொத்தம் 553 பேர் காயமடைந்துள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இரு மாகாணங்களில் மொத்தமாக 30 குடியிருப்புகள் முற்றாக சேதமடைந்துள்ளது என சுற்றுச்சூழல் அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.