நீலகிரியில் உள்ள முதுமலை வனவிலங்கு சரனாலயத்தில் 16 வயது மதிக்கதக்க ஆண் யானை ஒன்று இறந்து கிடந்ததை கண்ட வனதுறை ஊழியர்கள் மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
மேல் அதிகாரியின் உத்தரவின் பேரில் கால்நடை மருத்துவர் யானையின் உடலை பரிசோதனை செய்தார்.
அதில் யானையின் தாடை மற்றும் வாயில் புண் அதிகமாகி சீழ் நிரம்பி இருந்தது தெரியவந்தது.
கடுமையான வெயில் காரணமாக காடுகள் வறண்டு, வாய்க்கு இதமான பசுமையான இலை தழைகள் கிடைக்காததால், மென்று உண்ண முடியாமல் உயிரிழந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வணக்கம் இலண்டனுக்காக நீலகிரியிலிருந்து A.N.கெளடர்.